Tuesday, January 22, 2008

எனக்கு தெரிந்தது..

பொய்யெனத் தெரிந்தும்
உன் கோபங்களுக்கு,
பொய்யாய் வருத்தப்படுகிறேன்
மெய்யாய் நீ வந்து
என் மெய் தழுவுவாய்
எனத்தெரிந்து..

Sunday, January 6, 2008

இந்த பிரிவு நிரந்தரமில்லை..

உன் சுட்டு விரல் பிடித்துக்கொண்டு வந்தேன் நிலவை ரசிக்க,
இப்போது நீ,
விரலை விடுவித்துக்கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று நிலவை காட்டுகிறாய்,
இந்த பிரிவில் எனக்கு சோகம் இல்லை, நிலவு தேய்வது வளர்வதுற்குதான்...