Tuesday, December 30, 2008

தெரியாமலேயே போகட்டும்..

நம் நடுஇரவின் சிறு விழிப்புகளில்,

எனக்கு தெரியாமல் நீ என் தலை கோதுவதும்,
உனக்கு தெரியாமல் நான் உன் கன்னம் வருடுவதும்,
நம் இருவருக்கும் தெரியாமலேயே போகட்டும்..

Friday, December 26, 2008

பூத்திருந்த ஈரம்... :)

"வெளியே பெய்யும் மழையும் மிச்சமாய் கண்ணாடியில் பூத்திருக்கும் ஈரம்.. அதில் உன் விரல்பிடித்து எழுதிப்பார்த்த நம் பெயர்.. மழை நின்றாலும், ஈரம் காய்ந்தாலும், அழியாமல் நம் காதல்......."

Friday, December 19, 2008

ஏனோ எப்போதும்

"நிர்க்குமிழிக்குள் அடைப்பட்ட காற்றாய் 

என் மேலான அவளின் காதல், ஏனோ எப்போதும் அவள் ஊதும் நிர்க்குமுழிகளை 
உடைக்க எனக்கு பிடித்திருக்கிறது..."

Friday, December 12, 2008

அந்த நாள் ஞாபகம்...

இடுப்பிற்கும் அரைக்கால் சட்டைக்கும்

இடையில் நடக்கும் சண்டையில், 
பேசி கை கோர்க்க வைக்கும் அந்த ஊக்கு!!!