பட்டென்று பறந்துபோன வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள்..
அது உட்க்கார்ந்து நலம் விசாரித்தவிடத்தில்,
அப்படியே,
ஒரு பயணத்தில் என்முன் தரசினம் கொடுத்த
உன்னை
பற்றி பிதற்றுகிறேன் இப்போது..
பாலாடைதேசத்தின், பாலாடை வண்ணக்காரி,
உனக்கும், பாலாடைக்கும் சற்றே கொழுப்பு அதிகம்.. ;)
சத்தியமாய் சொல்வேன் நீ தேவதையென்று.
கவியில்லை
நான், ஒப்புக்கொள்கிறேன் சத்தியமாய்..
பார்த்த உன் அழிகை வருணிக்க முடியவில்லை..
உனக்குப் புரியாது என்றாலும் எழுதாமல்
நிற்கவில்லை என் பேனா உனைப் பற்றி..
நினையாமல் ஓயவில்லை மனதின் அலைகள்..
உனைப்பற்றி..
தேவதையே!!! இதுபோதும்,
என்தேவதைகளின் தேவதை என்னோடு ஊடலாட..
Thursday, September 17, 2009
French தேவதைக்கு...
Posted by ரமேஷ் at 12:55 PM 0 comments
Sunday, August 30, 2009
யார் முதலில்?
நம் சண்டையில்
Posted by ரமேஷ் at 10:34 PM 1 comments
Monday, July 6, 2009
பொழைக்காத பொழப்பு...
சட்டென பத்திக்கொள்ளும் பட்டி தொட்டியெல்லாம், சின்னக்கிளி என்றால். அவள் கரகாட்டமில்லாமல் நடக்காது எந்தத்திருவிழாவும் அந்த வட்டாரத்தில். விழா நடக்கும் ஊர் மட்டுமில்லாமல் சுத்து பட்டு ஊர்களில் இருந்தும் கூட்டம் சேரும் அவளை பார்க்க. சின்னக்கிளி பெயருக்கு ஏத்தாற்போல் அழகிலும் கிளி. வானம் பார்த்த அந்த பூமியில் இவளின் வம்சம் மட்டும் வனப்போடு வாயித்திருந்தார்கள்.
Posted by ரமேஷ் at 8:32 PM 1 comments
Labels: கதை
Wednesday, July 1, 2009
சாமி குத்தம்..
காலம்: 1970களின் தொடக்கம். இடம்: கோயமுத்தூரின் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்தில் சிங்காநல்லூர் கிராமம். தன் தோட்டத்தின் வடகிழக்கு இருந்த எல்லை முனியப்பனை கும்பிட்டு விட்டு கிளம்பினார் பெரியசாமி நாயக்கர். கடவுள் பக்தி மிகுந்தவர் பெரியசாமி நாயக்கர். அதுவும் எல்லை முனியப்பசாமி மீது அளவில்லா பக்தி. தன் ஊர், தன் தோட்டம், தன் குடும்பம் எல்லாவற்றிற்கும் காவலாய் இருப்பது முனியப்பன் தான் என்று நம்புபவர். ஊரில் எளவு விழுந்திருந்த நாட்கள், வீட்டில் கவிச்சி காய்ச்சும் நாள், இப்படி சில நாட்கள் தவிர எல்லா நாட்களும் தவறாமல் முனியாப்பனுக்கு பூஜை போடுவார். அந்த கிராமத்தில் படிப்பு வாசனை பெற்ற சில பெருசகளில் இவரும் ஒருவர். கல்வி கல்லாமல் இருப்பது மடமை என்பதை கடவுள் பக்திக்கு மேலாக நம்பினார். தன் தோட்ட வேலைக்கு வரும் விருமன் மகள் முதற்கொண்டு தன் கிராமத்தின் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்று விரும்பினார். கிராமத்தின் சாலைகள் எல்லாம் விரிவு படுத்தி தார் போட்டால் வேலை, பள்ளி சென்று வர உதவியாய் இருக்கும் என்று கிளம்பினார் சர்கார் அலுவலகம் தேடி. மறக்காமல் கும்பிடு போட்டுவிட்டு சென்றார் முனியப்பனுக்கு. கிராமத்தின் நல்ல நேரமோ, இவர் நல்ல நேரமோ சர்கார் அலுவலகத்தில் இவருடன் படித்த சீனிவாச ஐயங்கார் தான் முக்கிய பதவியில் இருந்தார். விரிவு படுத்தாத சாலையின் ஓரத்தில் தான் இருந்தது நாயக்கர் தோட்டத்து முனியப்பசாமி கோவிலின் பலி பீடம். சிநேகிதன் பெரியசாமி பற்றி நன்கு தெரிந்திருந்த சீனிவாச ஐயங்கார் உத்தரவிட்டு இருந்தார் பலி பீடமோ கோவிலோ சேதப்படாமல் சாலை விரிவு படுத்தவேண்டும் என்று. வேகாமாய் வந்தது சாலை விரிவு படுத்தலும் தாரும். முனியப்பசாமி மட்டும் பலிபீடம் இட்டு சிறிதாய் ஆக்கிரமித்து இருந்தார் சாலையை. கடந்த ஒன்று இரண்டு வருடமாய் நாயக்கர் குடும்பத்தில் நல்லதும் கெட்டதுமாய் சம்பவங்கள் நடந்து வந்ததால், அமாவாசை பூசை பெறாமல் காத்து இருந்தார் முனியப்பசாமி. அமாவாசையில் நள்ளிரவில் கோழி ஒன்றை பலி குடுத்து சிறிதாய் மதுவை வைத்து பூசை போட்டால் முனியப்பன் பலி கேட்க மாட்டார் என்பது நாயக்கரின் அசையாத நம்பிக்கை. நம் பெரியசாமி நாயக்கருக்கு ஒரே மகன். கருப்பண்ணன் அவர். தினப்பத்திரிக்கை வராத கிராமத்தில் இருந்து இந்தியாவின் சிறப்பு மிக்க கல்லூரியில் படித்து, அமெரிக்காவில் வேலையில் இருந்தார். பெரியசாமி நாயக்கர் தன் மகன் டெலிபொன் கம்பெனியில் வேலை செய்வாதாக சொல்வார். உண்மையில் கருப்பண்ணன் டெலிபொன் கண்டுபிடித்த கம்பெனியில் ஆராய்ச்சியாளராக இருந்தார். காலையில் வந்த போன் அழைப்பில் ஆடிப்போய் இருந்தார் கருப்பண்ணன். அவசர அவசரமாய் தன் மேலதிகாரியிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்ப தயாரானார். இரண்டாம் நாள் வந்தும் சேர்ந்தார். கிராமமே திரண்டு வந்து இருந்தது. திரும்பி வர முடியாத தூரம் சென்று இருந்தார் பெரியசாமி நாயக்கர். உச்சி பூசைக்கு சென்ற மனுஷன் திரும்பி வராமல் போனதை பார்த்த சின்னம்மாள் பேச முடியாமல் சிலையாய் ஆனார், மகனை கண்டதும் வெடித்தார் “அந்த முனியப்பசாமி அப்பாவையே பலியா எடுத்துகுச்சுடா கருப்பன்னா”. குறுகிய சாலையில் நேருக்கு நேர் மோதாமல் இருக்க விலகிய வண்டி ஒன்று பலி பீடத்திற்கு பூசை போட்டுக்கொண்டிருந்த நாயக்கரை தோழோடு இடித்தது. பீடத்திற்கு பூசை செய்து கொண்டுஇருந்தவர் அதன் மேலயே விழுந்து உயிரை இழந்தார். இதை அறிந்த கருப்பண்ணன், நொய்யல் ஆற்றங்கரையில் நாயக்கரின் இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு திரும்பி வரும் போது, சீனிவாச ஐயங்காரிடம் சொன்னார், “அந்த பீடத்த எடுக்காம ரோடு போட்டது தான் காரணம், அந்த பீடாத எடுத்திட்டு ரோடு போடா ஏற்பாடு பண்ணுங்க. இனிமேல் முனியப்பன் பலி வாங்கமாட்டார்.” அப்படியே நடந்தது. நாயக்கருக்கு அப்புறம் யாரையும் பலி வாங்காத முனியப்பனை பற்றி இப்போதும் ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு, “தினமும் பூச போட்டு வந்த நாயக்கர கூட்டிட்டு போயிடுச்சுப்பா இந்த முனியப்ப சாமி” .
Posted by ரமேஷ் at 11:28 PM 5 comments
Monday, June 22, 2009
காணமல் போகட்டும்..
காதோரம் வந்து, "உனை எனக்கு ரொம்ப புடிக்கும்",
என்று சொல்லிவிட்டு போகிறாய்..
இதுவரை எழுதி, படித்து, கிழிந்த காதல் கவிதைகள்
எல்லாம் காணமல் போகின்றன...
Posted by ரமேஷ் at 2:46 AM 0 comments
Friday, May 29, 2009
விளைவுகள் :(
விளைவுகள் பாராமல்
Posted by ரமேஷ் at 2:06 AM 1 comments
Saturday, April 18, 2009
ம்ம்ம்ம்ம்...
வம்பிழுக்கும் எனை "போடா" என்று சத்தமாய் திட்டிவிட்டு..... அருகிலிருக்கும் என் தாயயை பார்த்து.. நாக்கை கடித்து தலை கவிழ்ந்து நிற்கும் நீ ம்ம்ம்ம்ம்..........
Posted by ரமேஷ் at 2:14 AM 0 comments
Tuesday, April 14, 2009
அமெரிக்க அழகிக்கு...
பாலாடை கடன் வாங்கும் அந்த நிறம்.. களவு கொடுத்ததுபோக சிறிதாய் ஆடை திமிரை விட அதிகமாய் வெளியில் தெரியும் _____ இப்படி ஆயிரமாயிரம் இருந்தாலும்... கெண்டைகால் மட்டும் காட்டி, கொலுசு சத்தத்தோடு ஓடும் என்னூர்காரியின் போதையில் கட்டுண்டு கிடக்கிறேன்...
Posted by ரமேஷ் at 11:27 PM 0 comments
Wednesday, April 8, 2009
ம்ம்ம்ம்...... :)
திடீரென வந்த உன் அத்தையின் மாமா பையன்.. எனை கண்டுக்காதே என்ற நீ, வேண்டுமென்று உன்னருகே வந்த நான், பயத்தில் வேர்த்த நீ, பின் சிறிதாய் சண்டை.. என்று நினைத்தாலும் ம்ம்ம்ம்...... :)
Posted by ரமேஷ் at 12:29 AM 0 comments
Wednesday, March 4, 2009
இந்த ஜோதிடனின் எதிர்காலம்??
பொய் எனத்தெரிந்தும் நான் சொல்லும்
Posted by ரமேஷ் at 2:50 PM 0 comments
Sunday, January 18, 2009
எனதும் உனதும்!!!
என் கோவங்கள்,
Posted by ரமேஷ் at 11:55 PM 0 comments
Wednesday, January 7, 2009
எத்தனை இரவுகள் வேண்டுமானாலும்...
நடுஇரவின் சிறு விழிப்புகளில்,
Posted by ரமேஷ் at 10:52 PM 0 comments