Saturday, October 25, 2008

மீண்டும் மீண்டும்..

சாயும்காலத்தின் நிழலாய் நீண்ட வாக்குவாதம், 

பின்னிரவின் இருட்டோடு,
நம் முதுகுகளின் இடைவெளியில் புதைந்து போனது.. 
விடியலில் என் நெற்றியில் விழும் 
முத்தத்தின் ஈரத்தில் மீண்டும் பூப்பூக்கும் நமது காதல்...