Saturday, April 23, 2011

சித்திரை திருவிழா..

இப்ப எல்லா நம்ப கனகுக்கு புடிச்ச பாட்டு "ஒத்த சொல்லால என் நெஞ்ச..." பூளைமேடு பள்ளிக்கூடத்துக்கு போற 74 பஸ்ல வர பிரியா இதுக்கு காரணம். போன ஆறு மாசமா முயற்சி பண்ணி ஜெயிச்சிப்புட்டான் நம்ப hero.. வெள்ளனூர்ல இருந்து பூளைமேடு வரைக்கும் போற வரைக்கும் நம்ப பய பண்ணாத அலும்பு அட்டூழியம் இல்ல, தொங்கல்ல வாறது, ஒவ்வொரு stopலயும் எறங்கி, ஓடற பஸ்ல ஏற்றது இப்டி எல்லா செஞ்சு புள்ளைய கவுத்துபுட்டான். பசங்கா தா பொல்லாப்புனா புள்ளைங்க அதுக்கும் மேல. ஆறு மாசமா சாட காட்டி வந்தவ கடைசி பரீட்சை அன்னிக்கு சொல்லிச்சு "உன எனக்கு புடிச்சுஇருக்கு"
றெக்க மொளைக்காத கொற நம்ம தொரைக்கு, பள்ளிக்கூடம் இல்லாட்டியும் காலைல 9 மணிக்கு கெளம்பியாச்சு. ஹீரோ சைக்கிள்ல கெளம்பின நம்ம ஹீரோ ஊற வலம் வருவாரு. அன்னிக்கும் இன்னிக்குமா ரெண்டு ஒருதடவ பாத்தாலும் பார்வைல மட்டும் பேசிகிட்டாக இந்த ஜோடி. மோர்க்காரி, பால்காரர் வார நேரம் பாத்து பய மூனாந்த்தெருவுல நிப்பாப்டி. தரிசனம் கெடைக்கற அன்னிக்கு பயலுக்கு கொண்டாட்டம். செத்த நாள்ல வந்துச்சு மாரியம்மன் சித்திரை திருவிழா. ஊருக்குள்ள சிறுசும் பெருசும் கொண்டாட்டமாச்சு. பெருசுங்க தண்ணில மெதக்க சிறுசுங்க அதுங்க ஆளுங்கள தொரத்த இப்படி களகட்டுச்சு திருவிழா.
பண்டிக நாலாநாள் மஞ்சத்தண்ணி, ஊர்ப்பசங்க மேல புள்ளைங்க த்தண்ணி ஊத்தி சேதி சொல்ற நாள். கொஞ்சம் வெட்கம் விட்டு கதையோட அம்மணி நம்ப ஹீரோவா தொரத்த, ஓடிபோய் மறஞ்சுக்க பாத்தான் ஆத்தா பின்னாடி. இத்தனையும் பாத்தா ஆத்தா செல்லமா கோவபட்டுச்சு. "சித்தப்ப மக பெரியப்ப மவ அண்ண மேல தண்ணி ஊத்தக்கூடாது, உம்மாம மவ மேல போயி ஊத்து புள்ள" வெளயாட்ட சொன்ன பேச்சுல இருந்த உண்ம சாட்ட அடியா விழுந்துச்சு. பேசிக்கிட்டு இருக்கும் பொது ஒரு வாளி மஞ்சத்தண்ணி விழுந்தது கனகு மேல. ஊத்தினது அவன் மாமன்மக!!!